ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

0
84

ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்றுகொண்டிருந்த சந்தேகநபர், பேலியகொடை வனவாசல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோகிராம் 06 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி – திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(16) ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையே, மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் 10 கிராம் ஹெரோயினுடன் 37 வயதான சந்தேகநபர் ஒருவரும் 06 கிராம் ஹெரோயினுடன் இரத்மலானையில் 48 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here