கிரிக்கெட் மோசடி குறித்து பேசத் தடை

Date:

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் அனைவருக்கும் எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசேட கணக்காய்வுக்கு அமைய, விசேட கணக்காய்வு வரைவு வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகள் பொய்யானவை மற்றும் அவதூறானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...