சஜித் தலைமையில் ஆட்சியை பொறுப்பேற்க தயார்

Date:

ஐக்கிய மக்கள் சக்தி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தலைமையில் தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு தேர்தல் பிரிவுகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டங்களை நடத்தி முடித்துள்ளதாகவும், தனது கட்சி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராகும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவ ஊக்குவிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் “வெற்றி வெற்றி” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் இணைந்து கட்சியின் கிளைச் சங்கங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களை நிறுவும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...