26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தை:தேவியின் அவதாரமாக கருதி குடும்பத்தினர் மகிழ்ச்சி

Date:

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் பொலிஸ் பாதுகாப்பு படையில் தலைமை அதிகாரியான கோபால் பட்டாச்சாரியா, அவரது மனைவி சர்ஜூ தேவி என்ற தம்பதியருக்கு குறித்த பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைத்தியர் சோனி கூறுகையில்,

“குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால், இது ஒரு மரபணு கோளாறு ஆகும். அதே நேரம் குழந்தையின் தாயாரும் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்.”என தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது. இதனால் அந்த குழந்தை தேவியின் அவதாரமாக கருதி அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...