அஜித் நிவாட் கப்ரால், லலித் வீரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

தினியாவல பாலித தேரர் தொடுத்த வழக்கையே தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச் செயலில் ஈடுபட அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜையான இமாத் ஸுபேரிக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொது நிதியை வழங்கியதாக குற்றம் சுமத்தியே தினியாவல பாலித தேரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் என்ற வகையில், எவ்வித அங்கீகாரமும் இன்றி, இலங்கை மத்திய வங்கிக்கு இமாட் சுபேரிக்கு குறித்த தொகையை வழங்குமாறு, உடன்படிக்கை செய்துகொண்டதாகவும் கணக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி வழக்கை இரத்து செய்யுமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...