அஜித் நிவாட் கப்ரால், லலித் வீரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

0
68

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

தினியாவல பாலித தேரர் தொடுத்த வழக்கையே தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச் செயலில் ஈடுபட அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜையான இமாத் ஸுபேரிக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொது நிதியை வழங்கியதாக குற்றம் சுமத்தியே தினியாவல பாலித தேரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் என்ற வகையில், எவ்வித அங்கீகாரமும் இன்றி, இலங்கை மத்திய வங்கிக்கு இமாட் சுபேரிக்கு குறித்த தொகையை வழங்குமாறு, உடன்படிக்கை செய்துகொண்டதாகவும் கணக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி வழக்கை இரத்து செய்யுமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here