உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிப்பு

Date:

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து விலை 20 ரூபாவினாலும், சோற்றுப் பொதி விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவி  த்துள்ளது.

எரிவாயு அதிகரிப்பு மாத்திரமன்றி மின்கட்டண அதிகரிப்பு மற்றும் அரிசியின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

“நேற்று மீண்டும் எரிவாயு விலை அதிகரித்தது. நாங்கள் மூன்று மாதங்களாக எதையும் உயர்த்தவில்லை. ஆனால் நாளை முதல் அதிகரிக்கப்படும். கீரி சம்பா இல்லாததால் அரிசி 50 ரூபாவில் அதிகரித்துள்ளது. சந்தையில் கீரி சம்பா இல்லை. குடிநீர் கட்டணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே விலையில் கீரி சம்பாவை சந்தைக்கு கொடுத்தால் அரிசி விலையை குறைக்கலாம். மின்கட்டணம் அதிகரித்தால் மீண்டும் விலை உயர்த்தப்படும். அமைச்சர் நளீன் பெர்னாண்டோவை அரிசி மாஃபியாவை நிறுத்துமாறு கூறுகிறார். அரிசி வியாபாரிகளால் விலைவாசியை கட்டுப்படுத்தினால் அரசு தேவையில்லை. அமைச்சர் கோழி இறைச்சி விலையை குறைத்தால் அந்த பலன் மக்களுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...