உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிப்பு

Date:

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து விலை 20 ரூபாவினாலும், சோற்றுப் பொதி விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவி  த்துள்ளது.

எரிவாயு அதிகரிப்பு மாத்திரமன்றி மின்கட்டண அதிகரிப்பு மற்றும் அரிசியின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

“நேற்று மீண்டும் எரிவாயு விலை அதிகரித்தது. நாங்கள் மூன்று மாதங்களாக எதையும் உயர்த்தவில்லை. ஆனால் நாளை முதல் அதிகரிக்கப்படும். கீரி சம்பா இல்லாததால் அரிசி 50 ரூபாவில் அதிகரித்துள்ளது. சந்தையில் கீரி சம்பா இல்லை. குடிநீர் கட்டணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே விலையில் கீரி சம்பாவை சந்தைக்கு கொடுத்தால் அரிசி விலையை குறைக்கலாம். மின்கட்டணம் அதிகரித்தால் மீண்டும் விலை உயர்த்தப்படும். அமைச்சர் நளீன் பெர்னாண்டோவை அரிசி மாஃபியாவை நிறுத்துமாறு கூறுகிறார். அரிசி வியாபாரிகளால் விலைவாசியை கட்டுப்படுத்தினால் அரசு தேவையில்லை. அமைச்சர் கோழி இறைச்சி விலையை குறைத்தால் அந்த பலன் மக்களுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...