யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் கண்நோய்

Date:

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கண் நோய் வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

கண் கடுமையாகச் சிவப்படைதல், கண்ணில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுத்தல் இதன் அறிகுறிகள் என பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் மேற்கண்ட அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டையினை பயன்படுத்துமாறும், வெயிலில் செல்வதனைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...