காசா மோதல் விவகாரத்தில் இலங்கை நடுநிலையாக இருக்க வேண்டும்

Date:

இஸ்ரேல் – காசா மோதலில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இலங்கை நடுநிலையானது எமது இலக்குகளை அடைய உதவும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

“காசா பகுதியில் மோதில் ஈடுபட்டுவரும் எந்தவொரு தரப்பினரையும் இலங்கை ஆதரிக்கக் கூடாது.

இலங்கை எடுக்கும் நிலைப்பாடுகளால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறைப்பதாக எமது தீர்மானங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக பொருளாதாரம் தொடர்பில் இலங்கை தனது சொந்த நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்த வேண்டும்“ என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...