தேர்தல் முறை மறுசீரமைப்புக்கு முன்மொழிவுகளை வழங்க ஒன்பது பேர் கொண்ட குழு; வெளியானது வர்த்தானி

Date:

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் முறை மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவை நியமித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள விசேட யோசனையொன்றை நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்ததுடன், இந்த யோசனை தொடர்பிலான விடயங்களை ஆராய விசேட குழுவொன்றை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல்முறை மறுசீரமைப்பு தொடர்பில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இதற்காக அமைக்கப்படும் எந்தவொரு குழுவிலும் பங்குபற்ற மாட்டோம் எனவுட் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...