இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு களுவாஞ்சிக்குடியில் நினைவு தினம்

Date:

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின் 36 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன்,

“களுவாஞ்சிக்குடியில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்ட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்காத சூழ்நிலையில் தொடர்ந்தும் நீதியை கோரி மக்கள் போராடி வருகின்றனர்.

உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் தாங்கள் ஓயப்போவதில்லை. நீதிக்கான போராட்டங்கள் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும் என்பதை இன்றைய நாளில் தெரிவிக்கின்றேன்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...