டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Date:

தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாதத்தில் 2500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாய வலயங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில், கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,அவற்றில் கொழும்பு மாவட்டம் மிகவும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை எல்லை, கொதட்டுவ, நுகேகொட மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, அத்தனகல்ல, பைகம, களனி மற்றும் வத்தளை பிரதேசங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை மற்றும் பேருவளை பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன மேலும் தெரிவிக்கின்றார்.

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மக்களை மேலும் கேட்டுக் கொள்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...