மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் நடத்தப்படுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடி என எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டதில் எல்லை நிர்ணய குழு அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த முடியாது. தாமதிக்கவும் முடியாது. செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 17, 2024 க்கு இடையில் நடைபெற வேண்டும்.”
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.