16 வருடங்களின் பின்னர் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

Date:

2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரையும் நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமன் இன்று விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதிவாதிகளுக்கு எதிரான முன்வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தாலே அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

யோகராஜா நிரோஜன், கரன் எனப்படும் சுப்பிரமணியம் சுரேந்திர ராஜா மற்றும் கனகரத்தினம் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 16 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி வாகனத் தொடரணி மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தி அப்போதைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசீர் அலி முகமதுவை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டடே குறித்த மூவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...