வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியே தேவை – நிதி அல்ல

Date:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.

நீதியே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை இதனை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர் பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்காகவே நாங்கள் 14 வருடங்களாக நீதி கேட்கின்றோம்.

எங்களுக்கு அரசாங்கம் ஒதுக்குகின்ற பணம் தேவையில்லை நீதியே வேண்டும்.காணாமல்போன ஆக்களுக்கு ஒதுக்கிய பணத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த கடத்தப்பட்டவர்களுக்கு வழங்குங்கள் என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...