இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு ஆயுதம் பயிற்சி! பரபரப்பு தகவலை வெளியிட்டார் ஹக்கீம்!!  

Date:

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

காசா பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இந்த இலங்கையர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக ஹக்கீம் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு இஸ்ரேல் சென்று ஆயுத பயிற்சி பெறுவோர் மூலம் நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவனம் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த வெளிநாட்டு  வேலைவாய்ப்பு அமைச்சர் இலங்கை பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள இந்த இனவாத கருத்தை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...