பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்

Date:

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு நேற்று(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் கே.கட்டுபிட்டிய, போக்குவரத்து மற்றும் சமிக்ஞை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.பிராந்தியத்திற்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.எம்.செனரத், போக்குவரத்து மற்றும் சமிக்ஞை பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

குற்றப்பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ.கே.ஜயசிங்க, யாழ்.பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...