ராஜபக்ச தரப்பை விட மிக மோசமாகச் செயற்படும் ரணில் ; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Date:

தமிழர் தேசத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ராஜபக்ச தரப்பை விட ரணில் மிக மோசமாகச் செயற்படுகிறார் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான விலே நிக்கல், டெபோரா ரோஸ், ஜேமி ராஸ்கின், டேனி கே. டேவிஸ் ஆகியோரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்து கலந்துரையாடினார்.

மிக வேகமாக தமிழர் தேசத்தை இல்லாதொழிக்கின்ற, தமிழர் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இறங்கியிருக்கின்றது.

பௌத்த மயமாக்கலாக இருக்கலாம் சிங்களக் குடியேற்றங்களாக இருக்கலாம் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் நிலப்பரப்பைப் பறித்து சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதாக இருக்கலாம். இவையனைத்தும் ரணில் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

அதேநேரம், ஜனநாயகத்தை மறுத்து தமிழர்களின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை அவமதித்து, தமிழர்களின் அடிப்படை உரிமைகளாக இருக்கக்கூடிய நிரைவுகூரல் உரிமைகள் போன்ற விடயங்கள் அனைத்தையும் நசுக்கி அடக்கும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...