மீண்டும் வருகிறார் பசில்!

0
130

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ நாளை (05) நாடு திரும்பவுள்ளார்.

அவர் நாளை காலை 07.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் நோக்கில் ராஜபக்ச மீண்டும் வருகிறார். டிசம்பர் 15 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டிற்கு பின்னரே அவர் அமெரிக்கா சென்றார்.

எவ்வாறாயினும், பசில் ராஜபக்சவின் வருகை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாகவும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here