தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் – அநுர உறுதி

Date:

எதிர்கால தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய அவர், தீவிரவாதிகளோ இனவாதமோ இல்லாத மிதவாத தமிழ்த் தலைவர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடி வருவதாகத் தெரிவித்தார்.

“எதிர்கால NPP அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே தீவிரவாத அல்லது இனவாதமற்ற மிதவாத தமிழ்த் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அவர்கள் NPP அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தமிழ் மக்களின் மொழிப்பிரச்சினை, காணிப்பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு NPP தீர்வு காணும் என்றும், தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மொழிப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறோம். உங்கள் மொழியில் அரசை கையாள்வதற்கான உரிமையை உறுதி செய்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...