15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு

Date:

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பொது மன்னிப்பு தினத்தையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இலங்கை மீனவர்கள் கடந்த டிசம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மியன்மார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையில் அந்நாட்டு பிரதமர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக பண்டார தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்கள் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...