பாராளுமன்றம் கலைக்கும் திகதியை அறிவித்தார் அநுர

0
143

தேசிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு அமைச்சர்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

தமது அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அமைச்சுகளுக்கு இருபத்தைந்து அமைச்சு செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அன்றைய தினம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் நடாத்திய பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here