மன்னா ரமேஷை தடுப்புக்காவலில் விசாரணை செய்ய அனுமதி

Date:

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரிஜனகவை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு உத்தரவின் பேரில் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் என அழைக்கப்படும் ரமேஷ் பிரஜனக இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

அவிசாவளை பிரதேசத்தை மையமாக கொண்டு வர்த்தகர்களிடம் கப்பம் கோருதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகள் என மன்னா ரமேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...