அனைத்து SJB எம்பிக்களின் பதவிகளுக்கும் ஆபத்தா?

Date:

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களின் பதவிகளும் பெரும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் துணைச் செயலாளராக இருப்பதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தப் பதவியுடன் பல வேட்பு மனுக்களில் அவர் கையொப்பமிட்டிருப்பதும் இதற்குக் காரணம்.

தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணங்களில் அவர் கட்சியின் துணைச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கட்சியின் சட்டப்பூர்வ தன்மை குறித்து சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

பிரித்தானிய பிரஜையாக இருந்த அவரது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் அவர் துணைச் செயலாளராக இருந்தபோது வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...