தம்மிக்க பெரேரா தலைமையில் நாளை குருநாகலில் விசேட நிகழ்வு

Date:

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், டிபி கல்வி நிறுவனர் தம்மிக்க பெரேரா பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இதன்படி நாளை காலை 08.30 மணிக்கு குருநாகல் வெஹெர விளையாட்டரங்கில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தலைவர் தம்மிக்க பெரேரா தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

டிபி கல்வி ஐடி கேம்பஸ் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் கணினி மொழி பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய். குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 IT வளாகக் கிளைகளைச் சேர்ந்த 5000 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் நாளை வழங்கப்படவுள்ளன.

இந்த பாடநெறியில் அவர்கள் பூர்த்தி செய்த கட்டங்களின்படி, அங்கு வழங்கப்படவுள்ள சான்றிதழ்களின் பெறுமதி 3,000 மில்லியன் ரூபாவாகும்.

பிக்குகள், மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள் என சுமார் 10,000 பேர் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளதோடு குருநாகல் வரலாற்றில் மிகப் பெரிய சான்றிதழ் வழங்கும் விழாவாக இது அமையும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...