கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நாளை முதல் அமுல்

Date:

நாளை தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

போரா ஆன்மீக மாநாடு நாளை தொடக்கம் 16 ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் நாட்டுக்கு வரவுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டியில் உள்ள மரைன் டிரைவிற்குள் நுழையும் பல வீதிகள் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மூடப்படவுள்ளது.

அதன்படி, குறித்த வீதிகள் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையும், பிற்பகல் 1:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையும் மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், மாநாடு நடைபெறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...