க்ளப் வசந்தாவின் மனைவி வைத்திருந்தது சட்ட விரோத துப்பாக்கி

Date:

அதுருகிரி துப்பாக்கிச் சூட்டின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி வைத்திருந்த துப்பாக்கி சட்டவிரோத துப்பாக்கி எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.

மேலும் குற்றவாளிகள் மறைந்திருக்க முடியாது எனவும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றமும் வெளிநாட்டில் இருந்து நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மாதங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...