Saturday, September 28, 2024

Latest Posts

மட்டக்களப்பு இளைஞர் யுவதிகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட சேவையை பாராட்டினர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் உள்ளுர் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் தனது எதிர்கால திட்டங்களை இதன்போது விளக்கினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.