நல்லூரானை வழிபட்ட தமிழ் பொது வேட்பாளர்: தந்தை செல்வாவிற்கும் அஞ்சலி

0
52

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் நல்லூர் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

தந்தை செல்வா நினைவு சதுக்கத்திற்கு காலையில் சென்ற பொது வேட்பாளர் உள்ளிட்ட குழுவினர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டதுடன், நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தும் ஆசி பெற்றனர்.

தொடர்ந்து ஏனைய மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டதுடன், ஏனைய மத தலைவர்களிடமும் ஆசி பெற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here