போலியாக பதிவு செய்யப்பட்ட 6,000 வாகனங்கள் பயன்பாட்டில்

Date:

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகவும் சுங்க வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இவற்றிற்கு ஒரு தீர்வாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர் வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது

இதன்மூலம், ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் வாகனம் இலங்கைக்கு சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் முறையான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளத

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...