மேர்வினுக்கு இன்றும் பிணை இல்லை

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் மூன்று பேரை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதே சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...