துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் படி சிகிச்சைகளுக்காக சந்தேகநபர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துமிந்த திசாநாயக்க விசேட வைத்தியர் ஒருவரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

வௌ்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில்  தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...