‘தமிழீழம்’ காரணமாக CID சென்ற அர்ச்சுனா எம்பி

Date:

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (04) வாக்குமூலம் அளித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுப்பிய கடித்தத்திற்கிணங்க அவர், இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது:

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமைவாக  அங்கு சென்றதாகக் கூறினார். பாராளுமன்ற முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கையில் அமர்ந்த அர்ச்சுனா, தமிழீழ மக்களுக்கு வணக்கம் என விழித்து உரையாற்றினார்.

இதை அவர் தமது “வாடஸ்அப்பிலும்” வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

தம்மை,  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அர்ச்சுனா எம்.பி.நேற்றைய தினம் வெளியிட்ட காணொளியிலும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டு பாராளுமன்றத்திலிருந்து அர்ச்சுனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைவரும் எதிர்பார்த்த நாமலின் சொத்து விபரம் இதோ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கடன்களை தவிர்த்து 74 மில்லியன் ரூபா...

செந்தில் தொண்டமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின்!

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய...

கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத்...

ஒரு தந்தையின் மரணம் கற்பித்த பாடம்!

செப்டம்பர் 18, 2025 அன்று சுரங்க வெல்லலகேயின் மரணம், இலங்கை கிரிக்கெட்டில்...