இன்று முதல் 45 டிப்போக்களில் இருந்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள்!- திலும் அமுனுகம

Date:

நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 45 டிப்போக்களில் இன்று (05) காலை முதல் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இன்று மாலைக்குள் ஏனைய டிப்போக்களில் எரிபொருள் நிரப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் பெறக்கூடிய டிப்போக்கள்,

கொழும்பு – ஹோமாகம, மொரட்டுவ, மீதொட்டமுல்ல, தலங்கம, உடஹமுல்ல
கம்பஹா – ஜா-எல, கிரிடிவெல, கடவத்தை, நிட்டம்புவ
களுத்துறை – அளுத்கம, ஹொரண, களுத்துறை, மத்துகம
கண்டி – கண்டி தெற்கு, உடுதும்பர.
ருகுண – அம்பலாங்கொட, அக்குரஸ்ஸ, எல்பிட்டிய, ஹக்மன, மாத்தறை, உடுகம, கதிர்காமம், தங்காலை
நுவரெலியா – ஹங்குரன்கெத்த
சப்ரகமுவ – தெரணியகல, எம்பிலிபிட்டிய, கொடகவெல, கலவான
ஊவா – மொனராகலை, வெல்லவாய
வடமேற்கு – குளியாப்பிட்டிய, நிக்கவெரட்டிய, கல்கமுவ
ரஜரட்ட – அனுராதபுரம், தம்புள்ளை, ஹொரோபத்தான, கெபித்திகொல்லேவ, பொலன்னறுவை
வடக்கு – காரைநகர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி
கிழக்கு – மட்டக்களப்பு, களவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மூதூர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...