பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

Date:

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5 குற்றவாளிகள் தொடர்பில் இன்று (31) நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்கா ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தெம்பிலி லஹிரு, பாக்கோ சமன் ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தோனேஷிய பொலிஸார் இணைந்து நடத்திய ஒன்றிணைந்த சர்வதேச சுற்றிவளைப்பின் மூலம் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் இந்தோனேஷியாவில் நேற்று முன்தினம்(29) கைது செய்யப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...