வருகிறது தேசிய அரசாங்கம், பிரதமராகிறார் ரணில்! தமிழ் கூட்டமைப்புக்கும் அமைச்சு பதவி!!

Date:

எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் இவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என லங்கா நியூஸ் வெப் நாம் பல மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தோம்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் பாரிய உதவிகள் அவசியமான சூழலில் இவ்வாறான சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகவும், பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகவும் நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் இருக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் சுமார் 15 பேர் கொண்ட குழு தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேசிய அரசாங்கத்தின் விசேட அம்சமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அசோக ரன்வல விபத்தில் சிக்கினார்

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி,...

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...