உதய கம்மன்பிலவை கைது செய்வதில்லை

Date:

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்யத் தயாராகி வருவதாகவும், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, மனுதாரர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து பொலிஸார் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். 

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

அதன்படி, மனுவின் பரிசீலனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்திய துணை ஜனாதிபதி பதவி பிரமாண நிகழ்வில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள...

சஷீந்திர மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி...

DP கல்வி IT வளாகத் திட்டத்தின் 167வது கிளை திறப்பு

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில்...

இன்று மழை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...