வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கான இரு திட்டங்களும் வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2025 ஆம் ஆண்டு சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தில், மலையகத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தை தவிர புதிதாக வேறு எந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் ஜனாதிபதியின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பணவாக 200 ரூபா அரசாங்கம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும் , நுவரெலியாவில் IT Park உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இரண்டு திட்டங்களும் அமுல்படுத்தப்படும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, மலையகப்பகுதி IT துறை வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது எனவும், இதன் மூலம் தொழில் துறை வளர்ச்சி அடையும். எனவே ஜனாதிபதியின் இந்த இரு திட்டங்கள் வரவேற்கத்தக்கது எனவும் இ.தொ. கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...