2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிக்க கரம் போர்டுகள் மற்றும் டாம் பலகைகள் இறக்குமதி செய்து பகிர்ந்ததன் மூலம் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அலுத்த்கமகே, நலின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வரச்சி ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கில், முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்புகள் தொடர்பான உத்தரவை அறிவிப்பது மார்ச் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அலுத்த்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இன்றே அந்த உத்தரவு அறிவிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், நீதிபதி புத்திக சீ. ராகல தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட உத்தரவு இன்னும் தயாராக இல்லாததால், அது மார்ச் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என கூறினார்.
