லிட்ரோ கேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என்றும் போதுமான அளவு இருப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
நிறுவனத்திடம் போதுமான அளவு இருப்பு இருப்பதால், தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஏற்கனவே 284,000 வீட்டு எரிபொருள் நிரப்பு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று (19) முதல் சனிக்கிழமை வரை மேலும் 351,000 வீட்டு எரிபொருள் நிரப்பு சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
