ஜனாதிபதி தலைமையில், கட்சி தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு நேற்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்நிலையால் உலகளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன் தாக்கம் இலங்கையின் எரிசக்தி துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையைக் சமாளிப்பதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் ஜனாதிபதி கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ. ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
