முன்னர் மின்வெட்டு நிலைகளை இந்த நாட்டின் மக்கள் அனுபவித்துள்ளதால், அந்த காலங்களில் பயன்படுத்திய சாதனங்களையே மீண்டும் பயன்படுத்தி, மின்சார அமைப்பு அதிக சுமையை சந்திக்கும் நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
“எங்களுக்கு முடிந்தால் மாலை 6 மணி முதல் இரவு நாம் தூங்கும் 10 மணி வரை மின்சார பயன்பாட்டை குறைக்க வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் இருளில் வாழ்ந்த மக்கள்; மின்வெட்டு இருந்த காலத்திலும் வாழ்ந்தோம். அந்த நேரங்களில் மின்சாரம் இல்லாத போது பயன்படுத்திய சில சாதனங்கள் இன்னும் எங்கள் வீடுகளில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், இந்த அதிகபட்ச மின்சார தேவையை ஒரு அளவுக்கு குறைத்து, மின்சார அமைப்பிற்கு உதவியாக இருக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்துகளை பிரதி அமைச்சர் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
