கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

Date:

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு ஜெயிலர் மற்றும் ஒரு பெண் சிறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை மகசின் சிறையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில், இரண்டு கைதிகளும் ஒரு சிறை அதிகாரியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார்.

இந்த கைதி தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் சிறை நிர்வாகம் தெரிவித்ததாவது, இரண்டு கைதிகள் சிறைக் கூடங்களில் இருந்து வெளியேறி தப்பிச் செல்ல முயன்றபோது, அதைத் தடுக்க ஒரு சிறை அதிகாரி நடவடிக்கை எடுத்ததாகவும், அப்போது அவர்கள் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...

எம்பி அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது...