2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

Date:

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை மற்றொரு தரப்பினரிடம் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருநாள் பாராளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம ஒழுங்குபடுத்துநரும், சமகி ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

“5ஆம் திகதி தொடங்கும் பாராளுமன்ற வாரம் குறித்து கலந்துரையாட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று சபாநாயகரின் தலைமையில் நடைபெற்றது.

சமீபத்தில் நிதியமைச்சகத்தில் நடந்ததாக கூறப்படும் ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனை குறித்து ஒருநாள் பாராளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியாக நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால் தொடர்ந்து வைத்த அந்த கோரிக்கையை அரசு நிராகரித்தது.”

இவ்வாறு கயந்த கருணாதிலக எம்.பி. நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...