பாராளுமன்ற வளாகத்தில் உருவானது ‘ஹொரு கோ கம’ – மாணவர்கள் அதிரடி

Date:

பல்கலை மாணவர்கள் அதிரடி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நள்ளிரவு ‘ஹொரு கோ கம’ என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை அண்மித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று மாலை அரசுக்கு எதிரான பேரணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

மேலும், நேற்று அதிகாலை முதல் நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த வீதிகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸாரால் அமைக்கப்பட்ட இரும்புக் கம்பிகளுடனான வீதித் தடைகளை பல்கலைக்கழக மாணவர்கள் உடைத்தெறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நள்ளிரவு ‘ஹொரு கோ கம’ என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...