ரணில் – கோட்டா அரசாங்கம் இருக்கும்வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மைத்திரி அதிரடி கருத்து

Date:

தற்போதைய அரசாங்கம் மாறும் வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை கொண்ட சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே தற்போதைய தீர்வாகும் எனவும் அவ்வாறான சர்வகட்சி அரசாங்கம் அமையுமானால் உலகில் உள்ள பல நாடுகள் இலங்கைக்கு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, மின்சார சட்டத்தில் உள்ள சில பிரச்சினைகளினால் தான் வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

சீனா இலங்கைக்கு இயன்றவரை உதவி செய்யும் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...