CN

69 POSTS

Exclusive articles:

யாழ் தென்னிந்தியத் திருச்சபையின் அதிகாரங்கள் மறு அறிவித்தல் வரை மொடரேற்றரின் பொறுப்பில்

தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா அவர்கள் அண்மையில் நோயுற்றுத், தற்போது குணமாகி வரும் நிலையில், அவரின் மனைவி கலாநிதி (திருமதி) தயாளினி தியாகராஜா அவர்களால் பேராயருக்கு மூன்று மாதங்களுக்கு மருத்துவ விடுமுறை வழங்கும்படி கோரி சென்னையில் இருக்கும் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டுக்கு (Synod) எழுதப்பட்ட விண்ணப்பத்துக்கு இணங்கப் பேராயர் தியாகராஜா அவர்களுக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு லீவு வழங்க சினோட் தீர்மானித்துள்ளது. அத்துடன் பேராயர் டானியல் தியாகராஜா தானாகவோ அல்லது தன்னால் நியமிக்கப்பட்ட‌ பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் மூலமாகவோ திருச்சபை விடயங்களில் பணியாற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டிருப்பதுடன், அந்தக் காலப்பகுதியில் திருச்சபையினது நிருவாகப் பொறுப்புக்கள் யாவும் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டின் மொடரேட்டரின் பொறுப்பதிகாரியினாலேயே (Moderator’s Commissary) மேற்கொள்ளப்படும் எனவும் சினோட்டினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், தென்னிந்தியத் திருச்சபையின் மதுரை - இராமநாதபுரம் ஆதீனத்தின் பேராயராகக் கடமையாற்றும் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி எம் ஜோசேப் அவர்கள் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் அத்தியட்சாதீனத்துக்கான மொடரேற்றரின் பொறுப்பதிகாரியாக நேற்று 30 டிசம்பர் 2021 இல் இருந்து மறு அறிவித்தல் வரை செயலாற்றுவார். பேராயர் டானியல் தியாகராஜா அவர்கள் மீண்டும் செயற்படுவதற்கு இயலுமான நிலையினை எய்தும் வரைக்கும் அவர் கடமை ஆற்றுவார். பேராயர் தியாகராஜா தொழிற்பட ஆரம்பித்ததன் பின்னர் மொடரேற்றரின் அதிகாரி வாபஸ் பெறப்படுவார். மொடரேற்றரின் அதிகாரி யாழ் ஆதீனத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் காலப் பகுதியில், அவருக்கு ஒத்துழைப்பினை வழங்கும்படி ஆதீனத்தின் அலுவலர்கள், ஆதீன சபை, ஆதீனத்தின் கமிட்டிகள் மற்றும் சபைகள் யாவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். மேற்கூறிய விபரங்களை உள்ளடக்கிய 30 டிசம்பர் 2021 திகதியிடப்பட்ட கடிதம் மொடரேற்றரின் அதிகாரிக்கு, மொடரேற்றர் (Moderator) அதி வணக்கத்துக்குரிய தர்மராஜ் இராசாலம் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதிகள் யாழ் ஆதீனத்தின் அலுவலர்களுக்கும், பேராயர் டானியல் தியாகராஜா அவர்களின் பாரியார் கலாநிதி (திருமதி) தயாளினி தியாகராஜா அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாகாண சபையின் வரம்பையறியாதவர் வடக்கு மாகாண ஆளுநர். ஈ.பீ.டீ.பி சி.தவராசா

மாகாண சபையின் வரம்பையறியாமல் வடக்கு மாகாண ஆளுநர் செயல்படுவதனை எண்ணி  மனம் வருந்துகின்றோம் என ஈ.பீ.டீ.பியைச் சேர்ந்த தவராசா தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் இரு கலந்துரையாடல்களில் அமைச்சரின் சார்பில் பங்கு கொண்டிருந்தேன். இரு...

வடக்கு மாகாணத்தில் 3ஆம் திகதிவரை மழை நீடிக்கும்

கீழைக்காற்றின் செல்வாக்கு காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக கிடைக்கும் மழை எதிர்வரும் 03.01.2022 வரை தொடர்வதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளையும், நாளை மறுதினமும் சற்று கனமழை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.

நாம் இன்னும் அந்நிய நாடுகளின் பிடியிலிருந்து மீளவில்லை,. சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி.

நாம் இன்றுவரை அந்நிய நாடுகளின் பிடியிலிருந்து மீளவில்லை,அந்த அளவுக்கு நாட்டின் ஆட்சி இருக்கின்றது  என நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.நாங்கள் இந்தப் பகுதியின் புவிசார் அரசியலின் உலகக் குழுவிற்குள்...

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். திருகோணமலை...

Breaking

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...
spot_imgspot_img