கஜகஸ்தானின் 62 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்து – 45 பேர் பலி

Date:

62 பேருடன் பயணித்த விமானம் ஒன்று கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.

பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.

விமானம் அவசரமாக தரையிறங்கக் கோரியதாக கூறப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

விமானத்தில் 62 பேர் இருந்ததாக அஜர்பைஜான் விமான நிறுவனங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பாகுவிலிருந்து ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் க்ரோஸ்னியில் மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்டதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...