மின் கட்டணத்தை உயர்த்தும் யோசனையை அமைச்சரவை ஒத்திவைத்தது!

0
214

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரவை பத்திரத்தை பரிசீலித்து முடிவெடுப்பதை அடுத்த வார கூட்டத்திற்கு அமைச்சரவை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்மொழிவுகள் தொடர்பான அவதானிப்புகளுக்காக அமைச்சர்கள் அமைச்சரவைக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. தேவைகள், முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பு, எரிசக்தி முன்னறிவிப்பு மற்றும் நிதி குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது. முன்மொழிவுகள் மீதான அவதானிப்புகளுக்காக அமைச்சர்களின் அமைச்சரவைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் கூறினார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here