வல்வெட்டித்துறை இரு மீனவர்களையும் விடுதலை செய்ய இந்திய அரசு பரிந்துரை

Date:

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு  நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.


யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக படகு எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பிற்குள் சென்றமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து சென்னையில் உள்ள எக்மோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


இந்நிலையில், எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட வல்வெட்டித்துறையை சேர்ந்த இரு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு  நீதிமன்றுக்கு பரிந்துரை செய்துள்ளது.


அதன் பிரகாரம் அடுத்த வாரம் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...