இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே பதுக்கி வைத்திருந்த 875 கிலோ மஞ்சள் பறிமுதல்

Date:

இலங்கைக்கு இரவில்  கடத்துவதற்காக தமிழ்நாடு   மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை தமிழ்நாடு   பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமுழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு  கடத்துவதற்கு  மஞ்சள் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு போலிஸாருக்கு  தகவல் கிடைத்தது. 
இதன்படி, வேதாளை தென்  கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் போலீசார் துரித சோதனை நடத்தினர். அதன்போது ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 35 கிலோ வீதம் 25  மூடைகளில் 875  கிலோ மஞ்சள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 மஞ்சள் மூடைகளை  பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலைத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.  இது தொடர்பாக முகமது அலி ஜின்னா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.  
பறிமுதல்  செய்த  மஞ்சளின்  சர்வதேச மதிப்பு ரூ.3.75 லட்சம் என தமிழ்நாடு  போலீசார் தெரிவித்துள்ளனர். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...